25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


உலக வர்த்தகத்தில் புதிய சகாப்தம்!  14 பெர்த்... 2.5 கோடி கண்டெய்னர்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக வர்த்தகத்தில் புதிய சகாப்தம்! 14 பெர்த்... 2.5 கோடி கண்டெய்னர்கள்!

சிங்கப்பூரின் Tuas Port சரக்குப் போக்குவரத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கிய PSA Tuas Port, இதுவரை 25 மில்லியன் TEU சரக்குகளைக் கையாண்டுள்ளது.

TEU என்பது 20 அடி நீளமுள்ள ஒரு கண்டெய்னரைக் குறிக்கும் அளவீடு. அதாவது, 2.5 கோடி 20 அடி கண்டெய்னர்களுக்கு சமமான சரக்குகள் இங்கு கையாளப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய முழுமையாக தானியங்கும் கண்டெய்னர் முனையமாக விளங்கும் Tuas Port, திறமையான மற்றும் தடையற்ற சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 14 பெர்த்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2040-களில் ஆண்டுக்கு 65 மில்லியன் TEU சரக்குகளைக் கையாளும் வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News