25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கரிசல் மண்ணின் பண்பாட்டை  மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள், எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்றாவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள், எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா செப்டம்பர் 27.09.2024 முதல் அக்டோபர் 07.10.2024 வரை விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் “மரமும் மரபும்”  அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும்.

இது தொடர்பாக கரிசல் மண்ணின் பண்பாட்டை  மையமாக கொண்ட வண்ணச் சிறுகதைகள் எழுத்தார்வம் மிக்கோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறுகதைகள் குறைந்தது ஐந்து முதல் பத்து பக்கங்களுக்கு எழுதி shortstoriesvnrdt2024@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

குழு நடுவர்கள் மூலம் சிறப்பாக எழுதி அனுப்பப்படும் சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ10,000 ஆறுதல் பரிசு 5 நபர்களுக்கு ரூ5,000 வீதம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். மேலும், தேர்ச்சி பெறும் சிறுகதைகள் 3-ஆவது புத்தகத் திருவிழா மலரில் இடம்பெறும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News