25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


காரில் AC போட்டவுடன் விரைவில் Cooling ஆக.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காரில் AC போட்டவுடன் விரைவில் Cooling ஆக.....

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.இந்த சூழ்நிலையில் காரில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக ஏசியை போட்டு தான் பயணம் செய்வார்கள்.

அதே போல, வெளிக்காற்றும் அனலாக இருக்கும் என்பதால் காரின் ஜன்னலை திறந்து வைக்க முடியாதபடி இருக்கும். இதனால், அவர்கள் காரின் ஜன்னலை மூடடி வைத்து ஏசியை ஆன் செய்து வைத்து பயணிப்பார்கள்.

தற்போது கோடை காலம் வந்துவிட்டதால் உங்களது காரில் இருக்கும்AC செயல்படுகிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் காரில் செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

உங்களது காரை எப்பவும் நிழல் இருக்கும் இடத்தில் நிறுத்துங்கள். சூரிய ஒளி இருக்கும் இடத்தில் உங்களது காரை நிறுத்தினால் கேபினில் அளவுக்கதிமாக வெப்பம் இருக்கும்.

உங்களது காரை நிறுத்தும்போது ஜன்னல் கதவுகளை முழுமையாக மூடாமல் திறந்து வையுங்கள். அதாவது, காருக்குள் காற்று சென்ற வரும் வகையில் வழி ஏற்படுத்தி வையுங்கள்.

எடுத்த உடனேயே ஏசியை முழு full blower mode- ல் வைக்காமல் படிப்படியாக காற்று வரும் வேகத்தை கூட்டுங்கள்.

காரில் இருக்கும் AC Filter -யை சுத்தப்படுத்துங்கள். வேண்டுமானால், அதனை மாற்றிக் கொள்ளுங்கள்..

உங்களது ஏசி சரியாக இயங்குவதற்கு நீங்கள்ரெகுலராக அதனை பயன்படுத்த வேண்டும். சிறிய தொலைவிற்கு சென்றால் கூட பயன்படுத்த வேண்டும்.

இந்த  வழிமுறைகளை பயன்படுத்தியும் ஏசி கூலிங் ஆகவில்லை என்றால் சர்வீஸ் செய்வது நல்லது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News