25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சாட் ஜிபிடி (Chat GPT) மூலம்  AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI!

தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே AIதொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் AI நிறுவனம்.சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில்AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுOpenAI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும்GEMINI,AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின்DeepSeek,GWEN,AI என பல  AI கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.

சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் AI திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் AI க்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில்தான் அடுத்த கட்டமாகAI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் AI நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய AI ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.

இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே DiveDeeperinAI,Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் AI எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் AI சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் AI தொழில்நுட்ப ஆர்வலர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News