செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் சரியான நேரம் & முறை.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது போதுமான அளவு தான் இருக்கணும்.குறைவாக இருந்தாலும் செடி வதங்கிடும் .முதல்ல மண்ணுல ஈரப்பதம் இருக்கா இல்லையா என்பதையும் கவனிக்கவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது தொட்டியின் அளவு பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.மண்ணில் ஈரப்பதம் இருந்தால் மீண்டும் தண்ணீர் ஊத்த வேண்டாம். அதே சமயம் தொட்டில தண்ணீர் ஊத்தினப்போ அது உடனே கீழே உள்ள hole வழியா வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் மண்ணில் உள்ள சத்து குறைந்து விடும் மண்ணும் கொஞ்ச நீரை பிடித்து வைத்துக் கொள்ளும் அப்ப தான் செடிக்கு தேவையான ஈரம் கிடைக்கும். நாம ரெகுலராக தண்ணீர் செடிக்கு ஊற்றும் போது ஒரு குறிப்பிட்ட செடி வதங்குவதும் தெரியும், அவ்வாறு வதங்கும் செடிக்கு 2 முறை காலையிலும், மாலையிலும் ஊற்ற வேண்டும். இவ்வாறு கவனித்தால் செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்து நமக்கு நல்ல பலன் தரும். வாருங்கள் இயற்கையை நேசிப்போம்.
0
Leave a Reply