25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா  கொண்டாட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம்

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக  கொண்டாடினர். பிரசிடன்ட் ஆனந்தி இவ்விழாவில் 20 பெண்களை, அவர்கள் செய்திருக்கின்ற அளப்பறிய செயல்களைப் பாராட்டி, கெளரவப் படுத்தினார்.

இராஜபாளையம் டைம்ஸ் எடிட்டர், பப்ளிஸர் ஆன கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வரும் பத்திரிகையை பாராட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி கௌரவித்தார். அவரவர்கள் துறையில் சாதித்த எல்லா பெண்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா சியாம் சிறப்பாக பேசி ,பெண் முன்னேற வேண்டுமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் ,வேண்டவே வேண்டாம் என்றார். டாக்டர் சித்ரா அவர்கள் ,பெண் முன்னேற ஆண்கள் மட்டுமல்ல ,அப்பெண்ணிற்கும் தைரியமும், பின்வாங்கும் குணமும் இல்லாமல், தானாக முன்னேற வேண்டும் என்றார். ஆண்கள் உறுதுணை இருந்தாலும் பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார். விருது பெற்ற அனைத்து பெண்களும் சிறப்பாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. 5.30 மணிக்கு ஆரம்பித்த விழா 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.  இனிய இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News