25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா  கொண்டாட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம்

இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தினத்தை மார்ச் 8 ஆம் தேதி சிறப்பாக  கொண்டாடினர். பிரசிடன்ட் ஆனந்தி இவ்விழாவில் 20 பெண்களை, அவர்கள் செய்திருக்கின்ற அளப்பறிய செயல்களைப் பாராட்டி, கெளரவப் படுத்தினார்.

இராஜபாளையம் டைம்ஸ் எடிட்டர், பப்ளிஸர் ஆன கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வரும் பத்திரிகையை பாராட்டி அனைவரிடமும் அறிமுகப்படுத்தி கௌரவித்தார். அவரவர்கள் துறையில் சாதித்த எல்லா பெண்களையும் அறிமுகப்படுத்தி, சிறப்பித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா சியாம் சிறப்பாக பேசி ,பெண் முன்னேற வேண்டுமென்றால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம், தயக்கம் ,வேண்டவே வேண்டாம் என்றார். டாக்டர் சித்ரா அவர்கள் ,பெண் முன்னேற ஆண்கள் மட்டுமல்ல ,அப்பெண்ணிற்கும் தைரியமும், பின்வாங்கும் குணமும் இல்லாமல், தானாக முன்னேற வேண்டும் என்றார். ஆண்கள் உறுதுணை இருந்தாலும் பெண்கள் உறுதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் என்றார். விருது பெற்ற அனைத்து பெண்களும் சிறப்பாக பேசியது அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது. 5.30 மணிக்கு ஆரம்பித்த விழா 8.45 மணிக்கு நிறைவு பெற்றது.  இனிய இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News