சோயா உருளைக்கிழங்கு குருமா.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு,1 வெங்காயம்,2தக்காளி,ஒரு கப்மீல் மேக்கர்,
ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,1பட்டை,2கிராம்பு,
ஒரு கொத்துகறிவேப்பிலை,4 ஸ்பூன்தேங்காய் விழுது4 டீஸ்பூன் எண்ணெய்,
4 டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்,கைப்பிடி அளவுகொத்தமல்லி தழை .
செய்முறை:
மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றி
நன்றாக பிழிந்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை அரைத்து
விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு மீல் மேக்கர் சேர்த்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைக்கவும்.
தேங்காய் விழுது சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும். இந்த குருமா
சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
0
Leave a Reply