25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திற்குட்பட்ட செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.21 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 7 புதிய பழங்குடியினருக்கான குடியிருப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S.அவர்கள்  (13.09.2024) திறந்து வைத்தார்.

அதன்படி திருவில்லிபுத்தூர் வட்டம், செண்;பகத்தோப்பு பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்களின் 7 பழுதடைந்த வீடுகளை தலா 3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்ட 01.12.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ் வட்டாட்சியர், உட்பட அரசு அலுவலர்கள், பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News