25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கோல்வார்ப்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோல்வார்ப்பட்டி அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் கோல்வார்ப்பட்டி அணைக்கட்டு பகுதிகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (13.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து,  மதகுகளில்  மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான நீர்ப்பிடிப்புகளில் நீர்வரத்து உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீரை வெளியேற்றி, மீதமுள்ள தன்ணீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட  அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், விருதுநகர் வட்டம் குப்பம்பட்டி கிராமத்தில் கௌசிகா ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி மதிப்பில் நிலத்தடி நீர் செரிவூட்டலுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, மேற்கொள்ளப்படும் பணியின் முன்னேற்றம், தரம் குறித்து ஆய்வு செய்து, தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை வைப்பார் கோட்ட செயற்பொறியாளர் திருமதி மலர்விழி, உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், நீர்வளத்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News