25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.06.2024) அன்று விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 108 இலவச அவசர சிகிச்சை ஊர்தியில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், தற்போது மொத்தம் 25 அவரச ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 இலவச அவசர சிகிச்சை ஊர்திகள் பச்சிளம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவைகளில் சுமார் 125 நபர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த பணிகளில் முழுமையாக செயல்பட்டு  விரைந்து சென்று, சரியான சிகிச்சை அளித்து அதிக உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கடந்த வருடம் சிறப்பாக பணியாற்றிய ஊர்தி ஓட்டுநர் திரு.தங்கச்சாமி என்பவருக்கும், மருத்துவ உதவியாளர் திருமதி அருணா என்பவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.இந்நிகழ்வின் போது, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பாபுஜி, மாவட்ட 108  இலவச அவசர சிகிச்சை ஊர்தி ஒருங்கிணைப்பாளர் திரு.கருப்பசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News