25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


எலும்பு மற்றும் மூட்டினை உறுதி செய்ய....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலும்பு மற்றும் மூட்டினை உறுதி செய்ய....

அதிக எடையிருப்பின் அதைக் குறைக்க வேண்டும்.

 

தினமும் ஒரு மணி நேரமாவதுஉடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 

முடிந்த அளவுக்கு 30- 60 நிமிடங்கள் உடல் வெயிலில் படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

அதிகமான டீ, காபி,அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

மதுவை அறவே ஒழிக்க வேண்டும்.

 

ஸ்டீராய்டு மாத்திரையை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும்.

 

சரியான காலணியை உபயோகப்படுத்த வேண்டும்.

 

வலிநிவாரணியை மருத்துவர் ஆலோசனையின்றி அதிக நாட்கள் உபயோகப்படுத்தக் கூடாது.

 

தேவைப்படும் போது கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்களைத் தயங்காமல் உபயோகிக்க வேண்டும்.

 

கால்சியம் அதிகமுள்ளவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ள வேண்டும்.

 

வலிநிவாரணி எடுத்த பிறகும் வலி குறையாமல் இருந்தால் மருத்துவரை உடனே நாட வேண்டும்.

 

ஒரு சில யோகப் பயிற்சிகள் மூலமும் எலும்பை வலிமையடையச் செய்யலாம்.

 

வைட்டமின் டி உணவில் உள்ள சுண்ணாம்பு சத்தை எலும்பில் சேர உதவுகிறது. தினமும் சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதன் மூலமும், மீன், முட்டைக் கரு, கல்லீரல்,பால் போன்றவை உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி கிடைக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News