25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


Trade Apprenticeship Engagement Fair (TAEF)  28.01.2025  அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில்  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது

திருநெல்வேலி மண்டல அளவிலான, Trade Apprenticeship Engagement Fair (TAEF) 28.01.2025 செவ்வாய்கிழமை அன்று அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், திருநெல்வேலி, பேட்டையில்  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.

1. மத்திய அரசு தொழிற்நிறுவனங்கள்
2. மாநில அரசு தொழிற்நிறுவனங்கள்
3. முன்னணி தனியார் தொழிற் நிறுவனங்கள்

மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் அரசுஃதனியார் தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளான 1.Fitter 2) Machinist 3) MMV 4) Refrigeration Air Condition Technician  5)Electrician 6)Turner 7)Welder 8)Wireman 9)Surveyor  10) ஊழிய மற்றும் இதர பிரிவு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இந்நாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சியில் பயிற்சி பெறாதவர்கள் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8000/-முதல் ரூ.15000/- வரை தொழிற்நிறுவன தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது.மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate –NAC) மற்றும் முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படுகிறது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயிற்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News