பாட்மின்டன் இரட்டையர் தரவரிசையில் திரீஷா–காயத்ரி ஜோடி 27-வது இடத்துக்கு முன்னேற்றம்.
உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.) சார்பில், பாட்மின்டன் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய உலகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில், உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திரீஷா–காயத்ரி ஜோடி பங்கேற்றது.
இந்திய ஜோடி, தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த ஜப்பான் ஜோடியையும், 4-வது இடத்தில் இருந்த சீன ஜோடியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்தது. இதன் காரணமாக திரீஷா–காயத்ரி ஜோடி 39-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து 10-வது இடத்தில் தொடர்ந்து உள்ளார். உன்னதி 25-வது இடத்திலும், தான்வி 26-வது இடத்திலும் உள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2 இடங்கள் முன்னேறி, ‘டாப்-20’ பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் 13-வது இடத்துக்கு முன்னேறினார்.
0
Leave a Reply