அப்பளம்
அப்பளம் வாங்கி வந்தவுடன் அதன் மேல் உள்ள மாவை இரண்டு பக்கமும் காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு ,அதை நான்கு துண்டுகளாக்கி ,பிளாஸ்டிக் கவரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ,அப்பளம் பொரிக்கும் போது எண்ணெய் மிகவும் குறைவாக வைத்து பொரித்து எடுத்து விடலாம். இதனால் மீதி மிகக் குறைந்த அளவே எண்ணெய் இருக்கும்.
இதை வறுவல் செய்யும் போது பயன்படுத்தி விடலாம் ( அல்லது ) தாளிக்க பயன்படுத்தலாம். அப்பளம் பொரித்த பிறகு எண்ணெய் "சில அப்பளத்தின் மேல் நிறைய இருக்கும். இதற்கு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு (அப்பளத்தின் நுனியில் சிறிது பிய்த்து எண்ணெய்யில் போட்டால் உடனே மேலே வந்து விடும்.) அப்பளம் பொரித்து எடுத்தால் எண்ணெய் இருக்காது.
டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசி நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது.
0
Leave a Reply