25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக யோகா தினம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக யோகா தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் சார்பில் திருமதி சுகந்தி, திருமதி.விஜி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் எல்.ஐ.சி வெங்கட் நாராயண ராஜா, LIC மேலாளர் மற்றும் துணை மேலாளர்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.

எல் ஐ சி வெங்கட்நாராயணராஜா தனது உரையில் யோகாவின் தந்தை என அழைக்கப்படுபவர் சிவபெருமான் என்றும், தற்கால யோகாவின் தந்தை பதஞ்சலி முனிவர், மற்றும் திருமலை கிருஷ்ணமாச்சாரியார் என்றும் எடுத்துரைத்தார்

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை கற்றுக் கொள்வதோடு தொடர்ந்து பயிற்சியும் செய்ய வேண்டும் என்றார். இந்த ஆண்டின் பொன்மொழியாக  'வசு தேவ குடும்பகம்' .இதன் பொருள் "உலகம் ஒரு குடும்பம் " என்பது தான்  என்றும் எடுத்துரைத்தார்.

இன்று உலகம் முழுவதும் 190 நாடுகளில் மக்கள் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

முந்தைய அமெரிக்கா, குளிர்பானங்களின் கூடாரமாக இருந்தது .இன்றைய அமெரிக்கவில் எங்கு பார்த்தாலும் யோகா மையங்களும், தியான மையங்களும்  தான் நிறைந்து காணப்படுகின்றன என்றும் கூறினார். 

மேலும் மாணவர்களுக்கு சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக L.I.C. சார்பில் உண்டியல்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மாணவர்களுக்கு எளிதான யோகா வழிமுறைகளும், பயிற்சிகளும் , வாழும் கலை அமைப்பின் சார்பாக செய்து காண்பிக்கப் பட்டன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News