மிருதுவான இட்லி உப்புமாவிற்கு....
இட்லி உப்புமா செய்ய இட்லிகளை தண்ணீரில் இரண்டு நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் இல்லாமல் உ திர்த்து வைத்து தாளித்து உப்புமா செய்தால் உப்புமா வறண்டு போகாமல் மிருதுவாக இருக்கும்.
நார்த்தங்காய் ஊறுகாய் செய்யும் போது சுத்தமாக கழுவி துணியில் துடைத்த பிறகு வட்டமாக நறுக்கி மூன்று தினங்கள் வெயிலில் உலர்த்தி ஊறுகாய் செய்தால் கசப்பு தன்மை வராது, சுவையாகவும் இருக்கும்.
மசால் வடை விரைவில் செய்ய கடலைப்பருப்பை அலசிக் கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்தால் முக்கால் மணி நேரத்திலேயே நன்கு ஊறி விடும் அதன் பிறகு வடை செய்தால் நன்றாக வரும்.
முட்டை வேக வைக்கும் பொழுது சிறிது கடலை எண்ணெய், கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்..
0
Leave a Reply