தக்காளி புலவு
தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங்காயம் -3,தக்காளி -5, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. தேங்காய்ப்பால் அரை கப் (அல்லது) ஆவின் பால் - அரை கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி.
தாளிக்க: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 1.
செய்முறை : அரிசியைக் கழுவி. இரண்டரை கப் தண்ணீரில்ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாயை சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தக்காளி. மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, தேங்காய்ப்பால், உப்பு, ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) ஆகிய எல்லாவற்றையும் கலந்து, மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும், 'ஸிம்'மில் வைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.
0
Leave a Reply