25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விண்கல்லைக் கண்டுபிடித்த 14 வயது இந்திய சிறுவன்! நாசா அங்கீகாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விண்கல்லைக் கண்டுபிடித்த 14 வயது இந்திய சிறுவன்! நாசா அங்கீகாரம்.

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது மாணவன் தக்ஷ் மாலிக், விண்வெளியில் புதிய விண்கல் (Asteroid) ஒன்றைக் கண்டுபிடித்து உலகளவில் சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

6-வது இந்தியர்: விண்கற்களைக் கண்டுபிடித்த இந்திய மாணவர்களின் வரிசையில் தக்ஷ் மாலிக் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்காலிகப் பெயர்: இந்தக் கல்லிற்கு தற்போது '2023 OG40' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

பெயர் வைக்கும் உரிமை: இந்த விண்கல் குறித்து நாசா இன்னும் 4-5 ஆண்டுகள் ஆய்வு செய்யும். அதன் பிறகு, தக்ஷ் மாலிக் விரும்பும் பெயரை இதற்குச் சூட்டலாம்.

மாணவனின் விருப்பம்: "இதை கண்டுபிடித்த போது நாசாவில் பணியாற்றியது போல் இருந்தது. இதற்கு 'Destroyer of the World' அல்லது 'Countdown' என பெயர் வைக்க யோசித்து வருகிறேன்" என்று தக்ஷ் மாலிக் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

உலகமே பாராட்டும் இந்த 14 வயது இந்திய இளம் சாதனையாளரைப் பகிர்வோம், கொண்டாடுவோம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News