செயல்பாட்டிற்கு வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.
ராஜபாளையத்தில், அமைக்கப்பட்டு வரும் 864 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் துவங்கி 4 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைப்பு பணிகள் முடியாதது, குறித்து ஏக்கத்தில் உள்ளனர். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக மொத்தம் 864 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.
ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோட்டில் இடம் தேர்வு செய்து கடந்த 2020 மே மாதம். பூமி பூஜை நடந்து. கட்டுமானப்பணி கொரோனாவால் தாமதமானது. பின் கட்டட பணி முடிந்தும் மின் இணைப்பு வழங்காதது, பூங்கா அமைப்பதில் தாமதம், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவு பெறாதது என பல்வேறு காரணங்களால் தாமதமாகி கட்டட பணிகளுக்கு அடுத்து பயனாளிகள் தேர்வு, ஒப்படைப்பு என தாமதம் தொடர்கிறது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் விரைந்து ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு பிப். மாதம் பணிகள் முடிந்தும் தற்போது வரை தாமதிப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் .
0
Leave a Reply