25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  (01.10.2024) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.85 கோடி மதிப்பிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பையும், முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 2111 நபர்களுக்கு ரூ.42.96 இலட்சம் மதிப்பிலான பரிசுகளையும் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கி கடன் மானியம், ஆவின் விற்பனை நிலையம் அமைத்தல், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.22.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.38 இலட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும் என ஆக மொத்தம் ரூ.3.95 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக,  தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளுக்கு 478 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சிகளுக்கு 338 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சிகளுக்கு 300 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளுக்கு 183 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு என மொத்தம்  923  ஊராட்சிகளுக்கு 1299  கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கிடும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக  தொடங்கி வைத்தார்.கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தின் கீழ், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த  ஊராட்சி மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஏனென்றால்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், என்னை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமித்த பிறகு, சென்னைக்கு வெளியே நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. துணை முதலமைச்சராக நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சியும் இது தான்.

கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தை மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தோம்.  அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துக்களுக்கும்,, ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறோம். இதுவரை தமிழ்நாடு முழுக்க 18 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கி இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தென் மாவட்டங்கள் என்றாலே வீரத்துக்கு பேர் போன மாவட்டங்கள். வீரத்தில் மட்டுமல்ல, வீரமிக்க விளையாட்டுக்களிலும் தலைசிறந்த மாவட்டங்கள். குறிப்பாக விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான திறமைமிகு விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள்.நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் விளையாட்டினை, மாபெரும் இயக்கமாகவே மாற்றியுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கென 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் சென்றாண்டு, 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு 11 லட்சத்து 56 பேர், பங்கேற்றுள்ளனர். இதுவே, இந்த போட்டியின் வெற்றியைப் பற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் இருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத் தொகையை, நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 37 கோடி ரூபாயாக உயர்த்தித் தந்திருக்கிறார்கள். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கு,  இங்கே பரிசுகளை வழங்கி இருக்கின்றோம். இந்த நிகழ்ச்சிக்குக் கூட, நிறைய விளையாட்டுத் துறைச் சாதனையாளர்கள் வந்திருக்கிறார்கள்.கன்னியாகுமரி  மாவட்டத்தைச் சேர்ந்த,,  ‘Fencing’ வீர்ர் தம்பி ஜிஷோ நிதி,, இங்கே வருகை தந்திருக்கிறார். தம்பி ஜிஷோ நிதி, லண்டனில் நடைபெற்ற Common wealth Fencing Championship-ல் பங்கேற்று வெண்கலம் வென்றவர். குஜராத், பஞ்சாப், கோவா, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்,, 7 தங்கப்பதக்கம், 2 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார். இன்றைக்கு இந்திய இராணுவத்தில் நாட்டை காக்கும் பணியை செய்து வருகிறார்.பலருக்கும் முன் மாதிரியாக திகழும் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் , பாராட்டுகள்.

அதே போல, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த Basket Ball  வீராங்கனை தங்கை சுந்தரி இங்கே வருகை தந்திருக்கிறார். 38- வது National Youth Basketball Championship-ல் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு அணியில் இடம்பெற்றவர். விளையாட்டுத்துறையில், சாதிக்கத் துடிக்கும் மகளிருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சாதனைகளை படைத்து வரும் அவருக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு பேர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள், உலக அளவில் பல்வேறு சாதனைகளை, தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.சில நாட்களுக்கு முன்பு, ஹங்கேரியில் நடந்த, 45-ஆவது FIDE Chess Olympiad  போட்டியில்,  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கங்களை வென்றது. தங்கம் வென்ற இந்திய செஸ் அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் தம்பி குகேஷ், பிரக்ஞானந்தா, ஸ்ரீநாத் நாராயணன், தங்கை வைஷாலி ஆகியோர், இடம்பெற்று சிறப்பான பங்களிப்பைத் தந்தனர்.அவர்களுக்கு நம் முதலமைச்சர் அவர்கள், மொத்தம் 90 இலட்சம் ரூபாயை, உயரிய ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். அதே போல, பாரீஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம். அந்த ஆறு வீரர்களுக்கும், போட்டிக்கு செல்வதற்கு முன்பாகவே நம் முதலமைச்சர் அவர்கள் தலா 7 இலட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கினார்கள். அவர்களில் பதக்கம் வென்ற 4 பேருக்கு மொத்தம் 5 கோடி ரூபாய் அளவுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் பரிசுத்தொகையை வழங்கினார்கள்.

இந்த மூன்று வருடங்களில் மட்டும், நம் முதலமைச்சர் அவர்கள், கிட்டத்தட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு, 38 கோடி ரூபாய்க்கும் மேலாக, உயரிய ஊக்கத்தொகையை வழங்கி இருக்கிறார்கள். அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் பல வருடக் கோரிக்கை. இந்த அரசு அமைந்த பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளின் பேரில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.ஏழை, எளிய, மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தொடர் உதவிகளை செய்து வருகிறோம். இந்த அறக்கட்டளையின் மூலம் நிதியுதவிப் பெற விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், TNCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக பார்முலா- 4 இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தினோம். கடந்த ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை வரலாற்றிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடத்திக் காட்டினோம். கேலோ இந்தியா போட்டியில், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம்  என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதன் முறையாக பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

விளையாட்டுத்துறையில் மட்டுமல்ல, அரசின் பல்வேறு துறைகளும் இன்றைக்கு மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்றன. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலித்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இது மட்டுமல்ல, நேற்றைய தினம், ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை சார்பில் நேற்று ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், இந்தியாவிலேயே அதிகளவில் வேலைவாய்ப்பை தரக்கூடிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும், அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.இப்படி எல்லாத்துறைகளிலுமே, தமிழ்நாடு இந்தியாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு, கிராமங்களில் இருந்து நிறைய விளையாட்டுத்துறை திறமையாளர்கள் வர வேண்டும். இதன் அடிப்படையில் தான் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரால், எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுத்துறை சார்பாக, முதல்முறையாக கலைஞர் அவர்களின் பெயரால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், அது கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டம் தான்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக்கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும்,, கலைஞர் அவர்களிடம் இருந்தன. அதனால் தான், இந்த திட்டத்திற்கு கலைஞரின் பெயரை சூட்டினோம். எப்போதும் யாராலும் வீழ்த்த முடியாத ஓர் அரசியல் வீரராக, கலைஞர் அவர்கள் திகழ்ந்தார்கள். எனவே, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகின்றன. இவற்றைப் பெறக்கூடிய இளைஞர்கள், கலைஞர் அவர்களுக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும், நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்.இன்று கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை பெற வருகை தந்துள்ள, அத்தனை ஊராட்சிகளுக்கும், அந்த ஊராட்சிகளின் முகங்களான மாணவர்கள், இளைஞர்களுக்கும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று. மாவட்ட அளவில் வென்று பரிசுகளை பெற்றுள்ள வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். உங்களுக்கு நம்முடைய அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 ஊராட்சி மன்றங்களுக்கு 564 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கும் விதமாக 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன், முதுநிலை மேலாளர்(தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) திருமதி ஜெ.பியூலா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி விசாலாட்சி, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள், நகர்மன்றத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், விளையாட்டு வீரார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News