25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 24, 2026

206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையத்தினை (பிங்க் பூத்) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச் சாவடி மையம் மற்றும் 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி மையத்தினை (Pink Booth) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள்  (22.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1,292 அலுவலர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1,480 அலுவலர்களும், 204-சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1,396 அலுவலர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1,392 அலுவலர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1,348 அலுவலர்களும், 207-அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,296 அலுவலர்களும், 208-திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 அலுவலர்களும் என மொத்தம் 7  சட்டமன்ற தொகுதிளில்  2,001 வாக்குச்சாவடி மையங்களில் 9,604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.மாதிரி வாக்குச்சாவடி மையம்:மாதிரி வாக்குச்சாவடி என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களைக் கவரும் வகையிலும், வாக்களிப்பதை எளிமைப்படுத்தும் வகையிலும் சிறப்பாக வடிவமைக்கப்படுவதாகும்.இந்த வாக்குச்சாவடி முழுவதும் வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் இருக்கும். மேலும் நிழற்பந்தல், குடிநீர் வசதி, நாற்காலிகள் மற்றும் கழிப்பறை வசதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்தளங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் சிறப்பு வரிசைகள் இருக்கும்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில்  202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 95-எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 261-குருநான சம்மந்தர் இந்து உயர்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 280-மேலகாந்தி நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியிலும்,205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 57-சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ்.பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 206- விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 149-ஷத்திரிய பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 125-தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 44-கலுவனசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் என ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாதிரி வாக்குச் சாவடி வீதம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடி (Pink Booth):          ஒரு வாக்குச்சாவடியின் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என, அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். பெண் வாக்காளர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள்,   என அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்க இது உதவுகிறது.பிங்க் பூத்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, குடிநீர் மற்றும் நிழற்கூடங்கள் போன்றவை உள்ளன. பெண் வாக்காளர்கள் பொது வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இது பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில்  202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி 94-ஏ.கே.டி.ஆர்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி 259-மகாராஜபுரம் நாகம்மாள் ராஜையா தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதி 201-மேட்டுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,205-சிவகாசி சட்டமன்றத் தொகுதி 239-எஸ்.எச்.என்.பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதி 151-ஷத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளியிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 145-கஞ்சநாயக்கன்பட்டி கம்மவார் இந்து தொடக்கப்பள்ளியிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதி 57-காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளியிலும் என  ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு இளஞ்சிவப்பு நிற (Pink Booth) வாக்குச் சாவடி வீதம் மொத்தம் 7-மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி, 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் முழுமையாக பெண் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையத்தினை (பிங்க் பூத்) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Apr 22, 2026

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்பு.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)) , 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (21.04.2026) மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I A S ., அவர்கள்(திருச்சுழி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.ந.ஸ்ரீநாதா,இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 2001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 9,604 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (நிலை 1, நிலை 2, நிலை 3)), 157-நுண் பார்வையாளர்கள் மற்றும் 1,010 வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள 1,073 காவலர்கள் தேர்தல் பணிகளில் அமர்த்தப்பட உள்ளனர்.அதனடிப்படையில், இன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பணிபுரியவுள்ள காவல் துறை அலுவலர்களை இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 22, 2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். “ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு கோஷங்கள் முழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என்ற ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தினர். மேலும், நவதானியங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கோலம் மூலம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி, 100% வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Apr 22, 2026

தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு- தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி பா ஆனந்தி அவர்கள் தகவல்.

சென்னை, தொழிலாளர் ஆணையர் திரு.சி.அ ராமன், I A S. அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்றும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 23.04.2026 நாளன்றும் இரண்டாம் கட்டமாக 29.04.2026 நாளன்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்  நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் மற்றும் விதி 135B-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரையின்படி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு, வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மேற்கு வங்காளத்தில் 23.04.2026 மற்றும் 29.04.2026  ஆகிய தேதிகளில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், மேற்கு வங்காளத்திலிருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் அம்மாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக மேற்படி தினங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக தேர்தல் தினமான 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தினங்களில் மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் தலைமையில் அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை 04562-252130, 94453 98763, 91594 43377, 98653 90006 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி பா ஆனந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 20, 2026

7 தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள் ,மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்புகள்  (18.04.2026) பல்வேறு மையங்களில் நடைபெற்றன.சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி மையத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S,. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (நிலை 1, 2, 3) ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் விரிவான பயிற்சி அளித்தனர்.தொகுதிவாரியாகப் பங்கேற்ற அலுவலர்களின் விவரம்:202-இராஜபாளையம்:-பி.ஏ.சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி - 1,292 அலுவலர்கள்.203-திருவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலைக்கழகம் - 1,480 அலுவலர்கள்.204-சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி - 1,396 அலுவலர்கள்.205-சிவகாசி:எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளி -  1,392 அலுவலர்கள்.206-விருதுநகர்: கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - 1,348 அலுவலர்கள்.207-அருப்புக்கோட்டை:தேவாங்கர் கலைக்கல்லூரி - 1,296 அலுவலர்கள்.208-திருச்சுழி: சேது தொழில் நுட்ப பயிலகம் - 1,400 அலுவலர்கள்.ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் மொத்தம் 9,604 அலுவலர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், "ஜனநாயகக் கடமையான தேர்தல் பணியில் எவ்விதத் தொய்வுமின்றி செயல்பட இந்தப் பயிற்சி மிக அவசியமானது. நுணுக்கமாக  வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகளை இப்போதே முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் நாளன்று எவ்விதப் பதற்றமுமின்றி அலுவலர்கள் நேர்த்தியாகச் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Apr 18, 2026

விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையம் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மையமான விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர்  (17.04.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.வாக்கு எண்ணிக்கை கால அட்டவணைஇந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று இந்த மையத்தில் எண்ணப்பட உள்ளன.வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இந்த ஒரே மையத்தில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு அறையிலும் தேவையான எண்ணிக்கையிலான மேசைகள் மற்றும் தடுப்புக் கம்பிகள் (Barricades) அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் தபால் வாக்குகள் எண்ணுவதற்குத் தேவையான பிரத்யேக வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  மைய உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புவாக்கு எண்ணிக்கை மையத்தில் தொகுதி வாரியாக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் (Counting Halls) குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்படும் இருப்பறைகள் (Strong Rooms) மற்றும் அவற்றிற்கான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பார்வையிடப்பட்டது.வாக்குச்சாவடி முகவர்களுக்கான பிரத்யேக அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் (Parking) ஆகியவற்றைத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அமைக்க அறிவுறுத்தப்பட்டது.பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், தடையற்ற மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திடவும், தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரின் தயார் நிலையில் வைத்திருக்கவும், மூன்றடுக்கு பாதுகாப்பு முறை மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் 24 மணி நேரக் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவ்விதத் தொய்வுமின்றி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.ஊடக மையம் (Media Center) தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக, உரிய வசதிகளுடன் கூடிய ஊடக மையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Apr 18, 2026

விருதுநகர் மாவட்டத்தில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவினை பெற்ற பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை எய்திடும் வகையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே நேரடியாக விளக்க கூட்டம் நடத்துதல், விழிப்புணர்வு பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதி மொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் மூலமாகவும், தொலைகாட்சிகள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதிகளில் தனிக்கவம் செலுத்தி, அங்குள்ள பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைவான வாக்குப்பதிவு பதிவான பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களின் இல்லங்களுக்கே களப்பணியாளர்கள் நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தும், “என் வாக்கு, என் குரல்”, “100 சதவீதம் வாக்களிக்க தயாராகுவோம்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை(Stickers) ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.ஊர்வலம்:தொடர்ந்து, அப்பகுதிகளில்”ஜனநாயகத்தின் கூர்மையான ஆயுதம் நம் வாக்குரிமை, அதனை மழுங்காமல் காப்பது நம் கடமை” மற்றும் “100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.கையெழுத்து இயக்கம்:மேலும், "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.உறுதிமொழி:"இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையுள்ள குடிமகனாகிய நான், நாட்டின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்துவேன் என்றும், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆட்படாமல், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எனது வாக்கினை நேர்மையாகப் பதிவு செய்வேன் என்றும் உறுதி கூறுகிறேன்." என்ற உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இறுதி நிகழ்வாக, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Apr 18, 2026

பதற்றமான 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கணிணி அறையில்,(17.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்கள்(இராஜபாளையம், மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு.அரவிந்த் மீனா,I A S, அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு.ரஞ்சித் குமார் லால்,I A S, அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு.சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா,I  A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு மற்றும் பாதூப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 130 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 130 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 10 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 11 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 34 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 26 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 40 தேர்தல் நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 157 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாக்குச்சாவடி மையங்களை கண்காணித்திட மையத்திற்கு ஒரு நுண்பார்வையாளர் என 130 நபர்களுடன், 20 சதவீதம் இருப்புடன் மொத்தம் 157 நுண்பார்வையாளர்கள் கணிணி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 17, 2026

7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் வாக்குச் சீட்டு ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 முன்னிட்டு, தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தேர்தல் பொதுப்பார்வையாளர் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்) திரு.உதயன் மிஷ்ரா,I  A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 644 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 349 விவிபேட் இயந்திரங்கள், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 369 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 400 விவிபேட் இயந்திரங்கள்,204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 698 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 378 விவிபேட் இயந்திரங்கள், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 345 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 374 விவிபேட் இயந்திரங்கள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 337 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 365 விவிபேட் இயந்திரங்கள், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 648 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 351 விவிபேட் இயந்திரங்கள், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 700 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்,என ஆக மொத்தம் 3741 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2396 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 2596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Apr 17, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த, தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நாளில் (23.04.2026) அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்த வழிவகை செய்யும் வகையில், அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தின் 7- சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில், காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய சேவைகளில் (AVES) பணிபுரியும் பணியாளர்களுக்கும், 20.04.2026, 21.04.2026 மற்றும் 22.04.2026 ஆகிய நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் கீழ்க்கண்ட விவரப்படி தபால் வாக்குகளை செலுத்த தபால் வாக்கு மையம் (Postal Voting Centre) அமைக்கப்பட்டுள்ளது.202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், இராஜபாளையத்திலும்,  203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருவில்லிபுத்தூரிலும்,  204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூரிலும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை உதவி ஆட்சியர் அலுவலகம், சிவகாசியிலும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகரிலும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டையிலும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் தபால் வாக்கினை வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழியிலும் செலுத்தலாம்.இதுதொடர்பாக, 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜீவ் காந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00661) அவர்களையும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00660) அவர்களையும்,  204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வடிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00662) அவர்களையும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.லட்சம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00663.) அவர்களையும், 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு திரு.இராஜாமணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00667) அவர்களையும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு திரு.செந்திவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00664) அவர்களையும்,  208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.கருப்பசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் வட்டாட்சியர் (94450 00668) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்/மாவட்டத் தேர்தல் அலுவலர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 141 142

AD's