25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஆறாம்  நாள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 ஆறாம் நாள்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஆறாம் நாளான 02.10.2024 அன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்(திருநெல்வேலி) திருமதி பெ.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில், திரு.கா.சி.தமிழ்க்குமரன் அவர்கள் எழுதிய “மந்தைப் பிஞ்சை” என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் திரு.சோ.தர்மன் அவர்கள் “மனிதர்களும் மரங்களும்” என்ற தலைப்பிலும், பேச்சாளர் திரு.பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் “தாயினும் சாலப்பரிந்து” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் படைப்புலகில் பெண்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சூ.பாமா, திருமதி ர.ரமாதேவி, திருமதி பிருந்தா ஜ.ராகவன் அவர்கள்  ஆகியோர்கள் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) திருமதி தனலட்சுமி  அவர்கள் வரவேற்புரையும், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ம.ஷீலா சுந்தரி  அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News