25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண் பொறியியல் துறையின் மூலமாக  (26.07.2024) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த இலவச கட்டணமில்லா பராமரிப்பு மேளாவினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S அவர்கள்  துவக்கி வைத்தார்.

 வேளாண் இயந்திரங்களை முறையாகப் பராமரித்தால் தான் அவற்றின் பணித்திறன் மேம்பட்டு, நீண்ட கால பயன்பாட்டிற்கு  உழவு பணிகளில்  ஈடுபடுத்த இயலும்.டிராக்டர்களை பராமரிக்கும் வழிமுறைகள்,  வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை, உயவுப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்டவை பற்றியும்  விவசாயிகள் அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

வேளாண் இயந்திரங்கள், கருவிகளை திறம்பட இயக்குதல் மற்றும்  பராமரிக்கும் வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், இம்முகாம் இன்று நடைபெற்றது.பின்னர், இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள் டிராக்டர்களுடன் உபகரணங்களைப் பொருத்தி இயக்கிடும் செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தார்கள்.மேலும், வேளாண்மைப் பொறியியல்துறையில்  பணித்தளத்திலேயே  பழுதுநீக்கம் செய்து தரும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் தங்களது சந்தேகங்களை விவசாயிகள் நேரில் கலந்துரையாடி தெரிந்து கொண்டார்கள் என மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்    திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைத்துறை செயற்பொறியாளர்கள்,   உதவி பொறியாளர்கள்,வேளாண் பொறியியல் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News