25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு  கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஷத்ரிய வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கருவூலம் சார்பில், வருமானவரி  பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் திரு.ச.சுந்தர் அவர்கள் தலைமையில் 18.07.2024 அன்று நடைபெற்றது.

ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குதுறை, சென்னை அவர்களின் அறிவுரையின்படி வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின் கீழ் வருகிற அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தின் கீழ் வருகின்ற தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன்கருதி வருமான வரி பிடித்தம் குறித்த கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதுரை சரக வருமான வரி துணை ஆணையர் திரு. மதுசூதனன், I.R.S.,  அவர்கள், வருமான வரி அலுவலர் திரு.ஜி.வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News