25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்     முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  (26.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார்.அரசாணை.(Ms).எண்.55, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (K2) நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50லிருந்து ரூ.2000ஃ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தமிழில் பெயர் பலகை வைக்காத  கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது, தமிழில் பெயர் பலகை வைக்காத 28 நிறுவனங்கள் மீது தலா ரூ.2,000/- வீதம் மொத்தம் ரூ.56,000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள், விதி 15 மற்றும் உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B, தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 -ன் படி, ஒரு கடைகள் நிறுவனம் அல்லது உணவு நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் அதன் பெயர் பலகை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும் பெயர் பலகையில் பிற மொழிகளும் உபயோகிக்கப்பட்டு இருந்தால், பெயர் பலகையில் பிரதானமாகவும், முதலிடத்திலும், தமிழ் மொழியில் இருக்க வேண்டும்.  இரண்டாம் இடத்தில் ஆங்கிலத்திலும், இதர மொழிகளில மூன்றாவது இடத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

 பெயர் பலகையில் பிற மொழிகளுக்கு ஒதுக்கி இருக்கும் இடத்தை விட தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமான இடத்தில் / பரப்பளவில் தமிழில் எழுதப்பட வேண்டும். பெயர் பலகையில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்த எழுத்துக்களில் இருக்க வேண்டும்.எனவே சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த ஆய்வின்போது, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருமதி மைவிழி செல்வி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் திரு. பிச்சைக்கனி, வட்டாட்சியர் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News