25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக சுற்றுலா தினம் - 2024- னை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism And Peace) என்ற கருத்துருவின் அடிப்படையில்  நடைபெற்ற பல்வேறு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக சுற்றுலா தினம் - 2024- னை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism And Peace) என்ற கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக சுற்றுலா தினம் - 2024- னை முன்னிட்டு, “சுற்றுலாவும் அமைதியும்” (Tourism And Peace) என்ற கருத்துருவின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரை, ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (27.09.2024) வழங்கினார்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இவ்வாண்டில் “சுற்றுலாவும் அமைதியும்” என்ற கருப்பொருளோடு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பாக விருதுநகர் அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து கடந்த 24.09.2024 மற்றும் 25.09.2024 ஆகிய நாட்களில் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடிவினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலர், அரசு அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News