விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -II , முதன்மை எழுத்துத் தேர்வு -,பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் .
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்எதிர்வரும் 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -II (தொகுதி -II மற்றும் தொகுதி -II-A) முதன்மை எழுத்துத் தேர்வு - (Main Written Examination) பதவிகளுக்கான போட்டித் தேர்வு விருதுநகர், கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் (K.V.S HR SEC SCHOOL VIRUDHUNAGAR) முற்பகல் 228 தேர்வர்கள் மற்றும பிற்பகல் 231 தேர்வர்கள் மொத்தம் 459 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் முற்பகல் நடைபெறும் தேர்விற்கு காலை 08.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 09.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வர்கள் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் நடைபெறும் தேர்விற்கு பிற்பகல் 01.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைபுரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 02.00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் தேர்வர்கள் பிற்பகல் 05.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (Passport) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN Card) / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
தேர்வர்கள் கருப்புநிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் தேர்வர்கள் தேர்வு கூடத்தின் உள்ளே மொபைல் போன், மின்னணு கைக்கடிகாரம் (Electronic Watch) புளுடூத் (Bluetooth) போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்கள் (Simple Analog Watches) பயன்படுத்தலாம். தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் தேர்வு நாளன்று காலை 06.00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply