25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >>


ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி  புதியகட்டிடம் திறப்பு விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா .

ராஜபாளையம் - தென்காசிசாலையில் அரசு ஆஸ்பத்திரிகடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ் பத்திரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர்,புத்தூர்,இனாம்கோவில்பட்டி, சேத்தூர், தேவதானம்,கோவிலூர்,சொக்கநாதன்புத்தூர், தேவிபட்டினம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம்,சங்கரபாண்டியாபுரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த ஆஸ்பத்திரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி பொது மக்களின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது.

 ரூ.40 கோடியில் 448 படுக்கை, 5 தளங்களுடன் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்,எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை அரங்கம், காது மூக்குதொண்டை பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, லேப் வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு, லிப்ட் வசதி, அதிநவீன விபத்து சிகிச்சை வசதி, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தொட்டி ,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து நவீன வசதிகளுடன் இந்தஆஸ்பத்திரி செயல்பட உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் (வெள்ளிக்கிழமை ) முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதியகட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News