பல்கலை விளையாட்டு 32வது சீசன் போட்டிகள்
பல்கலை விளையாட்டு32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது. இந்தியா சார்பில்90 பல்கலை., யில் இருந்து300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா20 வயது வீராங்கனை வைஷ்ணவி, பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் காலிறுதியில் ,ஜெர்மனியின் சினா ஹெர்மானை எதிர்கொண்டார். இதில் வைஷ்ணவி, 6-1, 6-4 என நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையரில் இந்தியாவின் வைஷ்ணவி, அதர்வாஜோடி6,2,7,5 என அமெரிக்காவின் ஒலிவியா, ஜெர்ரி ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மான்கேஷர்வானி, 6,2, 5,7, 4,10 என தாய்லாந்தின் ஸ்ரீராட்டிடம் தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா(தமிழகம்),5வது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இவர்11.88 வினாடி நேரத்தில் வந்து 2வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் அபிமன்யு, 52.85மீ., துாரம் எறிந்து 12வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
பெண்கள் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஆன்சி சோஜன் (6.20 மீ.,), 10 வது இடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply