25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் தகுதிப் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்('கேண் டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.நேற்று தலா இரு போட்டி கொண்ட அரையிறுதி சுற்று துவங்கின. 

முதல் உலகத் போட்டியில் தரவரிசையில்'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி,'நம்பர்-3' வீராங்கனை சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர்.17 வது நகர்த்தலில் சற்று பின்தங்கிய ஹம்பி, பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.38 வது நகர்த்தலில் இப் போட்டி‘டிரா’ஆனது. இருவரும் 0.5-0.5 என சம புள்ளியில் உள்ளனர்.

மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில்18வது இடத்திலுள்ள,19 வயது வீராங்கனை திவ்யா,'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா.இப்போட்டி30வது நகர்த்தலில்'டிரா' ஆக, இருவரும்0.5,0.5 என சம புள்ளி பெற்றனர்.இன்று அரையிறுதி இரண்டாவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் பைனலுக்கு செல்லலாம். மாறாக, மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News