அனுஷ்கா தோகூர் உலக துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் .
(ரைபிள்/பிஸ்டல் /ஷாட்கன்) ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் தங்கம் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
இந்தியாவின் அனுஷ்கா தோகூர் பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில்,621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான அன்ஷிகா (619.2 புள்ளி), ஆத்யா அகர்வால் (615.9) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
இந்தியாவின் தீபேந்திர சிங் ஷெகாவத், ஆண்களுக்கான50 மீ., 'ரைபிள் புரோன்' பிரிவு பைனலில், 617.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
மற்றொரு இந்திய வீரர் ரோகித் கன்யான் (616.3) வெண்கலம் வென்றார் . சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு தடைஇருப்பதால், துப்பாக்கி சுடுதல் ”கூட்டமைப்பு கொடியின் கீழ் விளையாடும் கமில் நுாரியாக் மெடோவ் (618.9) தங்கம் வென்றார். இதுவரை 5 பதக்கம் வென்ற இந்தியா, ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என முதலிடத்தில் உள்ளது.
0
Leave a Reply