உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பூஜா, ஜாஸ்மின், அரையிறுதிக்கு முன்னேறினர்.
உலக குத்துசண்டை சாம்பியன் ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் ,இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள்பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 80 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி, போலந்தின் எமிலியா கோடர்ஸ்காவை சந்தித்தார்.இருவரும் சம பலத்தில் மோதி, பூஜா 3-2 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் மமஜொனோ வாவை ,இந்திய வீராங்கனை ஜாஸ்மின் (57 கிலோ), எதிர்கொண்டார்.ஜாஸ்மின், 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.நுபுர் ஷியோரன், பூஜா, ஜாஸ்மின் என மூன்று வீராங்கனைகள் குறைந்த பட்ச பதக்கத்தை உறுதி செய்தனர்.
0
Leave a Reply