25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர்

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கானசர்வதேச வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன் 2026 பல்கேரியாவின் சோபியா நகரில் நடக்க உள்ளன.

தாய் லாந்தில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப்(16 வயது) நடக்கிறது. இதில் 'ஏ' பிரி வில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும்(தாய் லாந்து, ஆஸ்திரேலியா,சீனா) வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதில் நேற்று உலக வாலிபால் சாம்பியன்ஷிப் முதல் சீசனில் பைனலுக்கு முன்னேறிய வலிமையான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. 

முதல் இரு செட்டை இந்தியா 25-21, 25-16 என கைப்பற்றியது. அடுத்த இரு செட்டுகளை உஸ்பெகிஸ்தான் 25-19, 25,18 என வென்றது.கடைசி,5வது செட்டில் இந்திய அணி 15,13 வென்றது.இந்திய அணி 32 என்ற செட் கணக்கில்முடிவில் வெற்றி பெற்றது. முதன் முறையாக உலக வாலிபால் சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றது. 

இந்திய அணிதற்போது 'இ' பிரிவில் 6 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ஜப்பானை வீழ்த்தினால்,அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News