நீச்சல் 32வது உலக பல்கலை., விளையாட்டில் ரோகித் பெனடிக்சன் புதிய தேசிய சாதனை.
ஜெர்மனியில் 32வது உலக பல்கலை., விளையாட்டில் 114 நாடுகள் பங்கேற்று,. 18 விளையாட்டில் 234 பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. இந்தியாவின் 90 பல்கலையில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நீச்சலில் ஆண்களுக்கான 50 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் போட்டியில் இந்தியா சார்பில் ஹர்ஷ் சரோஹா, ரோகித் பெனடிக்சன் (தமிழகம்), பங்கேற்றார். சமீபத்தில் புவனேஸ்வரில், நடந்த தேசிய நீச்சல் சாம்பியன் ஷிப்பில் 100 மீ., தங்கம் வென்ற ரோகித், 6வது தகுதிச்சுற்றில் களமிறங்கி,24.00 வினாடியில் வந்து, ரோகித் முதலிடம் பிடித்து, புதிய தேசிய சாதனை ஆனது. ஒட்டு மொத்தமாக ரோகித், 12வது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.' மற்றொரு வீரர் ஹர்ஷ், 25.41 வினாடியில் வந்து, 4வது தகுதிச்சுற்றில், 4வது இடம் பெற்றார். ஒட்டு மொத்தமாக் 52வது இடம் பெற்று, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 400 மீ., பிரீஸ்டைல் போட்டியில் இந்தி யாவின் அனீஷ் (22 வது இடம்), ஷிவாங்க் (29) தோற்றார். .
0
Leave a Reply