25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்

குக்கூ, ஜோக்கர் போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இந்தப் படத்தை தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது 

கார்த்தி தன்னுடைய26 ஆவது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா படங்களுக்கு ட்ரிபியூட் கொடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக படக்குழு  அறிவித்திருக்கிறார்கள்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்தான் கார்த்தியின் 27 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் நல்ல ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

கார்த்திசதிஷ் செல்வகுமார்: நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து பேச்சிலர் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சதிஷ் செல்வகுமார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இவருடைய இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரும் கார்த்திக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.

நடிகர் கார்த்தி கைவசம் அடுத்தடுத்து இருக்கும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News