25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


மாவட்ட நிர்வாகம் மற்றும்  கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய  கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய  மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தை பற்றிய பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கு குறித்து ஆவணப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கும் ஒரு சமூகத்தில் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைமுறை என்று சொல்லக்கூடிய 30 ஆண்டுகளுக்கும் இந்த நான்கும் மாற்றமடையும். அதை ஆவணப்படுத்துவது என்பது எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம், கரிசல் இலக்கிய ஆய்வுக்கோவை - 2023, கரிசல் இலக்கிய மலர், கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்- பன்னாட்டுக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், Glimpses Of Virudhunagar District, கரிசல் நிலவியல் கதைகள், ECHOES OF VIRUDHUNAGAR ETHNIC VISUAL CELEBRATION, விருதுநகர் மாவட்டத்தில் காந்தி, கற்றது ஒழுகு மாணவர் விழிப்புணர்வு கையேடு, தமிழ்க் கவிதைகள் ஓர் அறிமுகம், கி.ரா.வின் முத்து கதைகள் பத்து, மரமும் மரபும் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு என்ன மாதிரியான வழக்காடுகள் இருக்கின்றது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக சொலவடைகள் என்ற கிராமப்புறத்தில் சொல்லக்கூடிய பழமொழிகள், விடுகதைகள், கிராமத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கைகள் சார்ந்த கதைகளாக இருக்கக்கூடிய நாட்டார் கதைகள் போன்றவைகள் நிறைய ஆவண படுத்தாமல் இருக்கிறது. அதனை பெரிய குழு அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, அதனை இரண்டு விதமாக ஆவண படுத்துகிறார்கள்.ஒன்று புத்தகமாகவும், மற்றொன்று வாய்மொழியாக சொல்லக்கூடியதை வீடியோ மூலமாகவும் ஆவணப்படுத்துகிறார்கள்.ஏறத்தாழ ஒரு 18 மணி நேரம் ஆவணப்படுத்த கூடிய வீடியோவை எடுத்து நமது கரிசல் கழகம் ஆவணப்படுத்தி இருக்கிறது. அதன்படி, புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ள கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள் (மரபும் புதிதும்) ஆகிய மூன்று நூல்கள் இன்று வெளியிடப்;பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News