பேங்கர்ஸ் காலனி பகுதியில் நாய்கள் தொல்லை
இராஜபாளையம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பேங்கர்ஸ் காலனிகுடியிருப்போர் நாய்கள் தொல்லை, மழைநீர் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இல்லை, சமூக விரோதிகள் நடமாட்டம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர், வாறுகால் இன்றி வெளியேற்றப்படும் கழிவுநீரோடு, மழைநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பகல் நேரங்களிலும் கொசு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். திருவள்ளுவர் நகரிலிருந்து நுழையும் பகுதி மின்விளக்கு வசதியில்லை. இதனால் இருட்டில் நின்றபடி வேறு பகுதியில் இருந்து வரும் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசாரின் ரோந்தும் கண்காணிப்பு கேமராவும் அவசியமாகிறது என்று கூறுகின்றனர்.
0
Leave a Reply