25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்சார்ந்தவர்களுக்குஜெர்மன் மொழி  தேர்வுக்கானபயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்சார்ந்தவர்களுக்குஜெர்மன் மொழி தேர்வுக்கானபயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலானபயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழித் தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training)அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சினைபெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்றும் பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing),பொதுநர்சிங் மற்றும் மருத்துவச்சி டிப்ளமோ (GNM Diploma), பி.இ(மெக்கானிக்கல்இன்ஜினியரிங்), பி.இ (பயோமெடிக்கல் இன்ஜினியரிங்), பி.இ (மின் மற்றும் மின்னணுபொறியியல் (EEE)) & பி.டெக்.தகவல் தொழில்நுட்பம் (B.Tech IT)ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும்வயது 21 முதல் 35 வரை நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00லட்சத்திற்குள் இருக்கவேண்டும். 

இப்பயிற்சிக்கான கால அளவு ஒன்பதுமாதமும் விடுதியில்தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சிமுடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில்பணிபுரியவும்ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.2,50,000/- முதல் ரூ.3,00,000/-வரைவருவாய் ஈட்டவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.இப்பயிற்சியில்சேருவதற்கு www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளமுகவரியில்பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவிண்ணப்பதாரர்கள் பதிவுசெய்து இவ்வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்.மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News