25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வீடுகளுக்கு  உள்ளேயே வளர்க்கும் இன்டோர் பிளான்ட்ஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீடுகளுக்கு உள்ளேயே வளர்க்கும் இன்டோர் பிளான்ட்ஸ்

இன்டோர் பிளான்ட்ஸ் என்றழைக்கப்படும் வீடுகளுக்குள்ளேயே வளர கூடிய தாவரங்கள் வீடு அல்லது வீட்டின் ஒரு அறையயை அலங்கரிக்கும் நோக்கங்களுக்காக, சுத்தமான காற்றை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்க உதவி கூடியவையாக இருக்கின்றன. அழகான வீட்டோடு சேர்த்து பால்கனி தோட்டத்தை அமைக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது. பலரும் வீட்டினுள் சிறிய அளவிலான செடிகளை வைத்து வளர்த்து வந்தாலும், சிலநேரங்களில் தங்களது பிஸியான வேலைகளுக்கு நடுவே அவற்றை முறையாக பராமரிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். 

பாம்பு செடி(SnakePlant): ஸ்னேக் பிளான்ட் என குறிப்பிடப்படும் பாம்பு செடியானது குறைந்த சூரிய வெளிச்சம் மற்றும் குறைந்த நீரை சார்ந்து எளிதில் உயிர்வாழும் தாவரமாகும். இந்த தாவரத்தை வளர்க்க வழக்கமான அடிப்படையில் பராமரிப்பது மற்றும் தண்ணீர் ஊற்றுவது தேவையில்லை. எனவே பிஸியாக இருக்கும் நபர்களுக்கு இந்த தாவரம் சிறந்த தேர்வாக அமைகிறது. இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதால் காற்று சுத்திகரிக்கப்படும்.

மணி பிளான்ட்(MoneyPlant): பணத்தாவரம் என்றழைக்கப்படும் மணி பிளான்ட் வீடுகளில் வளர்க்க மிகவும் எளிதான இன்டோர் பிளான்ட் ஆகும். தொட்டிகள் முதல் பாட்டில்கள் வரை குறைந்த பராமரிப்புடன் இது எங்கும் வளரக்கூடியது. வாஸ்து மற்றும் ஃபெங் சுய்-ன் படி இந்த தாவரம் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை தருவதாக நம்பப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News