25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ்

சிறுதானியங்களில் 11.8 சதவீ தம் என்ற அளவில் அதிகமான புரதச்சத்து கம்பு தானியத்தில் தான் உள்ளது.வைட்டமின்-ஏ உடலில் உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன், என்ற சத்துப்பொருள் கம்பு பயிரில் அதிகம் உள்ளது. இதுதவிர, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-சி, ரிபோ பிளேவின், நியாசின் சத்துக்கள் உள்ளன.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ் உதவுகிறது.  

 கம்பு தானியத்தை அடிக்கடி உணவாக உட்கொள்ளும்போது 2-ம் வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. கம்பு தானியத்தில் உள்ள அதிக நார்ச்சத்து குடலில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து செரிமானத்தை மெதுவாக செய்வதால் ரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், கம்பில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு உடலில் கட்டுப்படுகிறது. 

கம்பு தானியத்தில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவதால் இதயம் சீராக இயங்க உதவுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் பாலி சிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் எனும் கர்ப்பபை கட்டிகள், ஹார்மோன் சுரப்பு பாதிப்பு காரணமாக ஏற்படுகிறது. இதனை தடுக்க கம்பு உத வுகிறது. கம்பு தானி யத்தில் உள்ள அதிக நார்ச்சத்து மற் றும் மெக்னீசியம் ரத்த சர்க்கரை மற்றும் இன் சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் கட்டிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News