25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை  தடுக்கும் காந்தப்புல மாற்றம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை  தடுக்கும் காந்தப்புல மாற்றம்

சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை தடுக்கும் பூமியின் காந்த மண்டலம்.பூமியில் காந்த மண்டலம் தான் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை தடுக்கிறது. ஆனால் மின்காந்த மண்டலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில ஆயிரம் ஆண்டு களுக்கு ஒரு முறை மாற்றங்கள் ஏற்படும். வடபுலம் தென்புலமாக மாறும், மறுபடியும் தென்புலம் வடபுலமாக மாறும். 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியான மாறுதல் நடந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படியான முழு மையான மாற்றம் ஏற்படுவதற்கு இடையிலே காந்த மண்டலத்தில் அவ்வப்போது சிறிய மாற்றங்கள் ஏற்படும்.இவை சில ,நூறு  ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள்  வரைநீடிக்க  வாய்ப்பு உள்ளது. அத்தகைய ஒரு சிறிய மாற்றம் 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்துள்ளது என்றுவிஞ்ஞானிகள்கண்டுபிடித்துஇருக்கின்றனர்.

நியூசிலாந்து நாட் டில் ஒரு மரத்தின் தொல்லெச்சம் கண்டு பிடிக்கப்பட்டது. மரங்களில் உள்ள வளையங்களை வைத்து மரங்களின் வயதையும் சுற்றுப் புறத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கண்டறிய முடியும். ஆனால், இந்த மரத்தை ஆராய்ந்த போது ஒரு புது விஷயம் பதிவாகி இருந்தது. அதாவது 42,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பூமியின் காந்த மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பூமியில் ரேடியோ - கார்பனின் அளவுதிடீரென்று அதிகரித்துள்ளது என்பது  தெரியவந்தது.காந்த மண்டல  மாற்றத்தால் பூமியின் ஓசோன் மண்டலம் மெலிவுற்றது. இதனால் சூரியனிலிருந்து வந்த புற ஊதாக் கதிர்கள் தடுக்கப்படாமல் நேரடியாகப் பூமிக்கு வந்துள்ளன. இந்தக்கதிர்கள் பட்டுப் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. நம் மனித இனமான ஹோமோ சேபியன்ஸ் இந்தக் கதிர்களிடம் தப்பிப்பதற்காகவே குகைகளில் தஞ்சம் அடைந்தனர். சக மனித இனமான நியாண்டர்தால் இனம் பெருமளவில் அழிந்தது கூட இதனால் தான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவையெல்லாம் தற்போது அனுமானங்களாக முன் வைக்கப்படுகின்றன. இன்னும் தெளிவான ஆய்வுகள் இருந்தால் மட்டுமே இவற்றை உறுதிப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News