25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >> ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும். >>


வசிக்கும் வீடு நறுமணத்துடன் திகழ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வசிக்கும் வீடு நறுமணத்துடன் திகழ...

உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்(எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.

உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமனா எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.

ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News