25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


கர்நாடக மாநிலத்தில் குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கர்நாடக மாநிலத்தில் குட்டி தீவில் மண்டகட்டே பறவைகள் சரணாலயம்!

நகரங்களில் வாகனங்களின் சத்தம், இரைச்சல் நம் காதுகளில் வலியை ஏற்படுத்தும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொக்கா மாவட்டத்தின் மண்டகட்டே கிராமத்தினர் கொடுத்து வைத்தவர்கள்.

இங்கு1.14 ஏக்கரில் அமைந்துள்ள குட்டித் தீவில், பல வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு, அவை எழுப்பும் சத்தம் காதுகளுக்கு ரீங்காரமாக ஒலித்து, புத்துணர்ச்சியை அளிக்கும்,

சோலாபூர், மங்களூரு நெடுஞ்சாலை அருகில், துங்கா நதி பாய்வதால், பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலையை அளிக்கிறது 

மே மாதத்தில் இனப்பெருக்க நோக்கத்துக்காக உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பறவைகள் மண்டகட்டேவுக்கு வருகின்றன.

இங்கு டார்ட்டர்ஸ், மீடியன் எக்ரெட்ஸ், கார்மோரண்ட்ஸ், மெய்டன் எக்ரட், பீய்டு கிங்பிஷர், வூலி நெக் ஸ்டாக், உட்பட பல வகையான பறவைகள் வருகின்றன.

உயரமான இடத்தில் நின்று பார்க்கும் வகையில், கண்காணிப்பு கோபுரமும் கட்டப்பட்டு உள்ளது. பறவைகளை அருகில் சென்று பார்க்கும் வகையில், படகு சவாரியும் இருக்கிறது.

ரயிலில் செல்வோர் ஷிவமொக்கா ரயில் நிலையத்தில் இறங்கியும்; பஸ்சில் செல்வோர், ஷிவமொக்கா பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் செல்லலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News