ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டி 'டிரா’ ஆனது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் பெங்களூருவில் நடந்த போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்ல் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 365/5 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்டூர் (115) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று நடந்தநான்காவது, கடைசி நாள் ஆட்டத்தில்ஆறாவது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஸ் பந்தில் நிஸ்சால் (175) அவுட்டாக, ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. கடைசியில் லெம்டுர் (146) அவுட்டாக, நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 446 ரன்னில் ஆல் அவுட்டானது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படை யில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. நாகலாந்துக்கு 1 புள்ளி கிடைத்தது.
0
Leave a Reply