25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம்

பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண். 51762/எல்3/2024, நாள் 18.12.2024-ன்படி, இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B(4), 47A(1) மற்றும் 47A(3)–ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

         எனவே, விருதுநகர் வருவாய் மாவட்டத்தில்  இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B (4), 47A(1) மற்றும்  47A(3)- ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரைத் தீர்வையை விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் அறை எண்.  216-ல் இயங்கி வரும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News