25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை  சார்பில், 23.09.2025 முதல் 29.09.2025 வரை சர்வதேச காது கேளாதோர் வாரம் -2025 அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, சைகை மொழி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக 23.09.2025 முதல் 29.09.2025 வரை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசு சேவைகளை பெறுவதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு கூட்டம், விழிப்புணர்வு பேரணி, சிறப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

 மேலும், 23.09.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் நீல நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதன் தொடர்ச்சியாக  சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் வரை  சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

 இப்பேரணியில், தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள், செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், செவித்திறன் குறையுடைய பள்ளிக் குழந்தைகள், செவித்திறன் குறையுடைய சங்க பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரிதிநிகள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திவிழிப்புணர்வுஏற்படுத்தினர்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News