காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (06.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் ரூ.230.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்பு வீடுகளில் பணிகளின் தரம் குறித்தும், ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், சமூக நிதி விடுதியில் பயிலும் மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் தங்கு விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்கள் சேதுபதி அரசு மேநிலைப் பள்ளியில் தான் படிக்கிறார்களா என்பது பற்றி உறுதி தன்மையினை ஆராய்து, மேலும், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் வசதி, எண்ணிக்கை, மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், ஜோகில்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply