2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.
பனை குடும்பத்தில் உலகம் முழுவதும் 200 இனங்களை சேர்ந்த 2,600 வகையான பனை மரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் சுமார் 106 இனங்கள் பரவியுள்ளன.
இந்தியாவில் பனை குடும்ப மரங்கள் பயிரிடப்பட்ட வகை, அலங்கார வகை, காட்டு வகை என 3 குழுக்களாக வகைப்படுத் தப்படுகின்றன. பயிரிடப்படும் பனை மரங்களில், கோகஸ் நுசி பெரா என்ற தாவரவியல் பெயர் கொண்டதென்னை மரம் இளநீர், தேங்காய்களை தருவதால் 'சொர்க்கத்தின் அதிசய பனை' என அழைக்கப்படுகிறது.
இதற்கடுத்து, நுங்கு பதநீர் தரும் போராசஸ் பிளாபெல்லிபர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரங்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மரம் ஆகும். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன, அவற்றில் 4 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. பனை மரத்தை கற்பகதரு என அழைப்பர். அலங்கார பனையில், கோதை பனை என்ற பனையின் இலைகளில் விசிறிகள், பாய்கள், குடைகள் ஆகியவை தயார் செய்யப்பயன்படுகின்றன. தாலிபோட் பனை என்பது பனை மரக்குடும்பத்திலேயே 100 அடி உயரம் தாண்டி வளரும் அற்புதமான மரம் ஆகும்.
கூந்தபனை என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளில் வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் யானையின் விருப்பமான உணவாகும். இவ்வாறு பனை என்பது உலக அளவில் அதிசயமாக கருதப்படுகிறது.
0
Leave a Reply