25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.

பனை குடும்பத்தில் உலகம் முழுவதும் 200 இனங்களை சேர்ந்த 2,600 வகையான பனை மரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் சுமார் 106 இனங்கள் பரவியுள்ளன.

இந்தியாவில் பனை குடும்ப மரங்கள் பயிரிடப்பட்ட வகை, அலங்கார வகை, காட்டு வகை என 3 குழுக்களாக வகைப்படுத் தப்படுகின்றன. பயிரிடப்படும் பனை மரங்களில், கோகஸ் நுசி பெரா என்ற தாவரவியல் பெயர் கொண்டதென்னை மரம் இளநீர், தேங்காய்களை தருவதால் 'சொர்க்கத்தின் அதிசய பனை' என அழைக்கப்படுகிறது.

இதற்கடுத்து, நுங்கு பதநீர் தரும் போராசஸ் பிளாபெல்லிபர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரங்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மரம் ஆகும். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன, அவற்றில் 4 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. பனை மரத்தை கற்பகதரு என அழைப்பர். அலங்கார பனையில், கோதை பனை என்ற பனையின் இலைகளில் விசிறிகள், பாய்கள், குடைகள் ஆகியவை தயார் செய்யப்பயன்படுகின்றன. தாலிபோட் பனை என்பது பனை மரக்குடும்பத்திலேயே 100 அடி உயரம் தாண்டி வளரும் அற்புதமான மரம் ஆகும்.

கூந்தபனை என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளில் வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் யானையின் விருப்பமான உணவாகும். இவ்வாறு பனை என்பது உலக அளவில் அதிசயமாக கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News