அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விதிகளுக்கு அக்கறை கொடுக்கும் போக்கு வரத்து போலீசார், அதிக ஒளி ஊமிழும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளின் படி, நகர பகுதிகளில் எல்லைக்குட்பட்ட வாகனங்களை இயக்கும்போது குறைந்த பட்ச ஒளி விளக்கு ,எனும் 'லோ பீம்' உபயோகிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.வாகன ஒட்டிகள் இரவில் பிரயாணம் செய்யும் பொழுது, எதிரில் வரும் வாகனங்களுக்கு கார் லைட்டை டிம் செய்து, பின் ஒளிர விட வேண்டும் என் பது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது வாகன விதி .இது யாருக்கும் தெரியாதா? அல்லது அலட்சியமா?அதிகபட்ச ஒளி விளக்குகளை எறிய விட்டு வாகனங்களை இயக்குகின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை.திடீரென அதிக ஒளி கண்ணில் படும்போது பார்வை ஸ்தம்பித்து முடிவெடுப்பதற்குள் விபத்து ஏற்படுவது உடன், தொடர்ந்து எதிர் கொள்ளும் இத்தகைய ஒளியால் விழித்திரை பாதித்து பார்வை திறன் குறைகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மக்கள்எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply