25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (அருப்புக்கோட்டை வட்டாரம்)  மற்றும்  இலுப்பையூர்  ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ( நரிக்குடி வட்டாரம்) மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM)  கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கீழ்கண்ட பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

          மருந்தாளுநர்களுக்கு 2 பணியிடங்களும்,  ஆய்வக நுட்புநர்நிலை-3 (Lab Technician Gr-III) பணியாளர்களுக்கு 8 பணியிடங்களும்,  செவிலியர்களுக்கு, (RCH,NCD,RBSK,MMU,NBSU) 60 பணியிடங்களும்,  பல்நோக்கு சுகாதாரபணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-  II (MPHW HI Gr-II) பணியாளர்களுக்கு பணியிடங்களும்,  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு (Multi Purpose Hospital Worker)   பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.

        இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின்    http://virudhunagar.nic.in  என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

           மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 23.07.2025 அன்று முதல்    07.08.2025 அன்று மாலை 5.45  மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News